Tamil Sanjikai

இலங்கையில் கிறிஸ்தவ தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகளில் நடத்தப்பட்ட தொடர் வெடிகுண்டு தாக்குதலில் 250-க்கும் அதிகமான அப்பாவி பொதுமக்கள் பலியாகினர், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.

இந்த தாக்குதலை நடத்தியவர்கள் 9 பயங்கரவாதிகள் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலால் பெரும் அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அப்பாவிகளை கொன்றவர்களின் சடலத்தை வாங்க இலங்கை மத குருக்கள் மறுத்துவிட்டனர்.
குண்டு தாக்குதலை நடத்தியவர்களை இலங்கை இஸ்லாமியர்கள் ஏற்கமாட்டார்கள், அவர்களுடைய சடலம் மசூதியில் புதைக்க அனுமதிக்கப்படாது என இஸ்லாமிய மத குருக்கள் அமைப்பு (ஏசிஜேயு) அறிவித்துள்ளது.

ஏசிஜேயு நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பில், இஸ்லாமில் பயங்கரவாததிற்கு இடம் கிடையாது. இலங்கை இஸ்லாமியர்கள் வரலாற்றில் இதுபோன்ற வன்முறையான சம்பவம் இதுவரை நடைபெற்றது கிடையாது என தெரிவித்துள்ளது.

0 Comments

Write A Comment