பெங்களூருவில், மிரேஜ் 2000 என்ற பயிற்சி போர் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் அதிலிருந்து இரு விமானிகளும் உயிரிழந்தனர் என விமானப்படை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூருவில் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்தின் விமான நிலையத்தில் இன்று காலை பயிற்சி விமானமான மிரேஜ் 2000 தரையிறங்க முற்பட்ட பொது விபத்துக்குள்ளானது. விமானம் விபத்தில் சிக்கிய போது உடனடியாக விமானிகள் இருவரும் வெளியே குதித்து தப்பிக்க முயற்சி செய்தார்கள். ஆனால் அதற்குள் தீப்பற்றிக்கொண்டது என விமானப்படை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் விமானத்தில் இருந்த விமானிகளில் இருவரும் உயிரிழந்தனர். தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டனர்.
0 Comments