பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு குறித்து வெளியுறவுத்துறைச் செயலர் விஜய் கோகலே பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஜனாதிபதி ஜி ஜின்பிங் அடுத்த உச்சிமாநாட்டிற்கு பிரதமர் மோடியை சீனாவுக்கு அழைத்துள்ளார். பிரதமர் மோடி அழைப்பை ஏற்றுக்கொண்டுள்ளார். அவரது பயணத்திற்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும்.
மானசரோவர் யாத்திரைக்குச் செல்லும் யாத்திரீகர்களுக்கு அதிக வசதி செய்து கொடுப்பது குறித்து அதிபர் பேசினார். பிரதமர் தமிழக மாநிலத்துக்கும் சீனாவின் புதிய மாகாணத்துக்கும் உள்ள தொடர்பு குறித்து பல யோசனைகளை பரிந்துரைத்தார் என கூறினார்.
0 Comments