Tamil Sanjikai

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி நெடுந்தீவு அருகே, தமிழக மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்ததோடு, அவர்களின் படகையும் சிறைபிடித்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தை சேர்ந்த முனிவேல், ஸ்டீபன் ராஜ், மணிகண்டன் மற்றும் குமார் ஆகிய 4 தமிழக மீனவர்களை காங்கேசன் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்று விசாரணை நடத்திய இலங்கை கடற்படையினர், பின்னர் யாழ்ப்பாணம் நீரியல் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க உள்ளனர்.

0 Comments

Write A Comment