Tamil Sanjikai

அம்மா உணவகங்களில் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு விலையில்லா உணவு வழங்கும் திட்டத்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்.

அம்மா உணவகங்களில் இட்லி ஒன்று 1 ரூபாய்க்கும், பொங்கல், சாம்பார் சாதம், எலுமிச்சை சாதம், கருவேப்பிலை சாதம் ஆகியவை 5 ரூபாய்க்கும், தயிர் சாதம் 3 ரூபாய்க்கும் ஒரு செட் சப்பாத்தி 3 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. உணவுகள் அதே விலையிலேயே தொடர்ந்து விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர்களுக்கு அம்மா உணவகங்களில் விலையில்லா உணவு வழங்கும் திட்டத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தை சென்னை சாந்தோமில் உள்ள அம்மா உணவகத்தில் தொடங்கிவைத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொழிலாளர்களுக்கு உணவை பரிமாறினார்.

சென்னை மாநகராட்சியில் உள்ள 407 அம்மா உணவகங்கள் மற்றும் தமிழகத்தின் 11 மாநகராட்சிகள் மற்றும் 125 நகராட்சிகளில் உள்ள 251 அம்மா உணவகங்களிலும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments

Write A Comment