மும்பையில் தன்னிடம் ஆபாசமாக நடந்துகொண்ட வாலிபரை, பெண் கல்லூரி விரிவுரையாளர் துணிச்சலாக புகைப்படம் எடுத்து வெளியிட்டார்.
மும்பையில் உள்ள தனியார் கல்லூரிக்கு அருகே கடந்த சனிக்கிழமையன்று 21 வயதான வாலிபர் ஒருவர் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோ ரிக்ஸாவிற்கு பின்னர் நின்று கொன்டு தன்னுடைய கைபேசியில் ஆபாசப்படம் பார்த்துக்கொண்டிருந்துள்ளார்.
அப்போது கல்லூரி முடிந்து வெளியே வந்த 39 வயதான பெண் விரிவுரையாளரிடம், இந்த வாலிபர் தனது பிறப்புறுப்பை காண்பித்து ஆபாசமாக நடந்து கொண்டுள்ளார். இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் விரிவுரையாளர் சற்றும் தளராமல் தன்னுடைய கைபேசியின் மூலம் அந்த வாலிபரை புகைப்படம் எடுத்து அதனை ட்வீட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பின்னர் இந்த தகவலை அறிந்த மும்பை போலீசார் அந்த வாலிபர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
0 Comments