Tamil Sanjikai

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தேர்தல் நேரமாக இருப்பதால் பணம் எடுத்து செல்பவர்கள் உரிய ஆவணங்கள் வைத்து இருந்தால் பணம் பறிமுதல் செய்யப்படாது. பணப்பட்டுவாடா தொடர்பாக வருமான வரித்துறையிடம் பொதுமக்கள் தகவல் தெரிவிக்க இலவச உதவி எண்கள் - 1800 425 6669, வாட்ஸ் ஆப் - 94454 67707. பொள்ளாச்சி ஜெயராமன் புகார் தொடர்பாக தேவையான நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வருமான வரித்துறை உதவியுடன் பணபரிவர்த்தனைகள் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மதுரையில் தேர்தல் நடத்துவது தொடர்பாக ஆட்சியர், காவல் ஆணையர் அளித்த அறிக்கை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

0 Comments

Write A Comment