Tamil Sanjikai

மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் மக்களை சந்தித்த பிரதமர் மோடி, மக்கள் மத்திய அரசின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையே அவர்களை ஊக்குவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநிலங்களில், வரும் அக்டோபர் 21 அன்று சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இரு பெரும் கட்சிகளான, பாரதிய ஜனதா கட்சியும் காங்கிரஸ் கட்சியும், மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன.

மகாராஷ்டிரா மாநிலம் சகோலி நகரில், தேர்தல் பிரச்சாரத்தின் போது மக்களை சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி, மக்களுக்கு மத்திய அரசின் மீது இருக்கும் நம்பிக்கை தான், இதுவரை எந்த தலைவர்களும் எடுக்க யோசித்த தீர்மானங்களை எடுக்க வைத்ததாகவும், இந்திய மக்களின் நலனுக்காக தான் அயராது பாடுபட தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

0 Comments

Write A Comment