Tamil Sanjikai

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவராக மீண்டும் சோனியா காந்தி நேற்று நடந்த காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் நியமிக்கப்பட்டிருப்பதை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக தான் வரவேற்பதாகவும். மிகமிகச் சோதனையான காலகட்டத்தில் 1998–ம் ஆண்டு முதல் 2017–ம் ஆண்டு வரை 19 ஆண்டு காலம் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவராக பொறுப்பு வகித்து, காங்கிரஸ் கட்சியை வலிமையுடன் வழிநடத்தியவர். இவரது தலைமையின் கீழ் 2004 முதல் 2014–ம் ஆண்டு வரை 10 ஆண்டு காலம் மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியை வழிநடத்தி இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்வதில் பெரும் துணையாக இருந்தவர்.

கடந்த காலத்தில் இவரது தலைமையின் கீழ் காங்கிரஸ் கட்சி பல வெற்றிகளை குவித்தது. அதைப்போல, மீண்டும் சோனியா காந்தியின் தலைமையில் மதச்சார்பற்ற சக்திகளை ஒருங்கிணைத்து, வகுப்புவாத சக்திகளை முறியடித்து வெற்றி பெறுவார் என்கிற நம்பிக்கை இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது. சோதனையான நேரத்தில் தலைமைப் பொறுப்பை ஏற்க முன்வந்த சோனியா காந்தியை லட்சோப லட்சம் காங்கிரஸ் தொண்டர்கள் சார்பாக பாராட்டுகிறேன், போற்றுகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

0 Comments

Write A Comment