Tamil Sanjikai

மக்களவை தேர்தலில் உத்தரபிரதேசம் மாநிலம் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிட உள்ளார். இதற்காக நாளை அந்த தொகுதியில் பிரதமர் மோடி வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார்.

வாரணாசி தொகுதியில் மோடியை எதிர்த்து காங்கிரஸ் தரப்பில், பிரியங்கா காந்தி நிறுத்தப்பட வாய்ப்பு இருப்பதாக பரவலாக பேசப்பட்டது. பிரியங்கா காந்தியும், கட்சி தலைமை கேட்டுக்கொண்டால், வாரணாசியில் போட்டியிட தயாராக இருப்பதாக அதிரடியாக அறிவித்து இருந்தார்.

இந்த நிலையில், வாரணாசி தொகுதியில் மோடியை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் அஜய் ராய் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலின் போதும், வாரணாசி தொகுதியில் மோடியை எதிர்த்து அஜய் ராய்தான் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments

Write A Comment