Tamil Sanjikai

தொகுதி பங்கீடு தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக தொகுதி பங்கீட்டு குழுவுடன் கட்சியின் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியுடன் நடந்த 2ம் கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான ஒப்பந்தம் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தாகி உள்ளது.

இதேபோன்று தொகுதி பங்கீடு பற்றி தி.மு.க.வுடன் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சி 2வது கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.

தொகுதி பங்கீடு தொடர்பாக மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சியானது தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தையில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சியின் கே.பாலகிருஷ்ணன், ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்நிலையில், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடிந்து வெளியே வந்து செய்தியாளர்களிடம் பேசிய கே.பாலகிருஷ்ணன் கூறும்பொழுது, தி.மு.க. கூறிய தொகுதி எண்ணிக்கை பற்றி நாளை மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழுவில் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என கூறினார்.

இதேபோல் தொகுதி பங்கீடு குறித்து தி.மு.க.வுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் முத்தரசன் தலைமையில் 2-வது கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கோவை , தென்காசி, நாகை தொகுதிகள் விருப்ப தொகுதிகளாக இந்திய கம்யூனிஸ்ட் குறிப்பிட்டு உள்ளது.

இந்த பேச்சுவார்த்தையில் இந்திய கம்யூனிஸ்டுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு தி.மு.க. கூட்டணியில் 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்வதாக உடன்பாடு ஏற்பட்டு உள்ளது . இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனது கதிர் அரிவாள் சின்னத்தில் போட்டியிடும். 21 சட்டசபை தொகுதிகள் தேர்தலிலும் தி.மு.க.வுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு அளிக்கும் என கூறினார்.

0 Comments

Write A Comment