Tamil Sanjikai

வருகிற நவம்பர் 28-ம் தேதி மிசோரம் மாநில சட்டப் பேரவைக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. இங்கு மொத்தம் 40 பேரவைத் தொகுதிகள் உள்ளன. 2013-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போது காங்கிரஸ் கட்சி 34 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. இந்த நிலையில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு குறைவான நாட்களே உள்ள நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும், சட்டப்பேரவை சபாநாயகருமான ஹிப்பி தனது பதவியை இன்று திடீரென ராஜினாமா செய்துள்ளார். காங்கிரஸ் கட்சியில் இருந்தும் விலகுவதாக அவர் அறிவித்துள்ளார். மேலும், உடனடியாக பாஜக கட்சியிலும் அவர் இணைந்துள்ளார்.

2013-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் பாலக் தொகுதியில் இருந்து காங்கிரஸ் எம்.எல்.ஏவாக தேர்வான ஹிப்பி, அக்கட்சியின் முக்கிய தலைவர் ஆவார். வடகிழக்கு மாநிலங்களில் தற்போது மிசோரம் மாநிலத்தில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.

0 Comments

Write A Comment