Tamil Sanjikai

உத்தராகண்ட் மாநில நிதி அமைச்சர் பிரகாஷ் பந்த் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 58.

பிரகாஷ் பந்த் நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டு, உயர் சிகிச்சைக்காக அமெரிக்காவில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு உத்தரகாண்ட் மாநில முதல்வர் திரிவேந்திரசிங் ராவத் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், பல அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

0 Comments

Write A Comment