Tamil Sanjikai

திருச்சி விமான நிலையத்தில் 458 கிராம் எடையுள்ள, 17.68 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த நபரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

மலேஷியா நாற்றின் தலைநகரமான கோலாலம்பூரிலிருந்து திருச்சி வந்த மலிண்டோ ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்..

அப்போது சென்னையைச் சேர்ந்த ஜும்மா கான் என்பவர் தான் வைத்திருந்த ஐந்து லேப்டாப்களிலும் மறைத்து எடுத்து வந்த 458 கிராம் எடையுள்ள சுமார் 17.68 லட்சம் ரூபாய் மதிப்புடைய தங்க படலங்களை பறிமுதல் செய்து அவரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகினறனர்.

0 Comments

Write A Comment