Tamil Sanjikai

23ஆம் தேதி நடைபெற இருந்த தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலை நிறுத்த அண்மையில் உத்தரவிட்டிருந்தார் தென்சென்னை மாவட்ட பதிவாளர். ஆனால், இதை எதிர்த்து விஷாலின் பாண்டவர் அணி சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இதை தொடர்ந்து தேர்தல் சொன்ன தேதியில் நடைபெற அனுமதி வழங்கப்பட்டது.

இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் பாண்டவர் அணியினர் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து பேசினர்.

பின்னர் பேட்டி அளித்த நாசர். நடிகர் சங்க தேர்தலுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம். நடிகர் சங்கம் பற்றி முழுமையாக, அனைத்தையும் துணை முதல்வர் கேட்டறிந்தார். இன்று மாலை முதலமைச்சரை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம் என கூறினார்.

பின்னர் சென்னையில் நடிகர் சங்க தேர்தல் நடத்தும் அதிகாரி பத்மநாபனுடன், பாண்டவர் அணியை சேர்ந்த நடிகர் நாசர் சந்தித்து பேசினார்.

0 Comments

Write A Comment