அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியில் மாணவிகளிடம் பாலியல் பேரத்தில் ஈடுபட்ட வழக்கில் சிறையில் இருந்த முருகன், கருப்பசாமி ஆகியோர் ஜாமீனில் இன்று விடுவிக்கப்பட்டனர்.
கல்லூரி மாணவிகளை பாலியல் பேரத்தில் ஈடுபடுத்திய விவகாரத்தில் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி உதவி பேராசிரியர் நிர்மலாதேவி கடந்தாண்டு ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டார். அவருக்கு உதவியாக இருந்ததாக மதுரை காமராசர் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் முருகன், முன்னாள் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
கைதான முருகன், கருப்பசாமி ஆகியோருக்கு கடந்த 12 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இந்நிலையில், 10 மாதங்களுக்கு பிறகு மதுரை மத்திய சிறையில் இருந்து இருவரும் இன்று விடுவிக்கப்பட்டனர். சிறையில் இருந்து வெளியே வந்த உதவி பேராசிரியர் முருகன் தன் மீது தொடரடப்பட்டது பொய் வழக்கு என்றார்.
0 Comments