Tamil Sanjikai

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் வகையில், மரங்களில் விளம்பர தட்டிகள் , பலகைகள், கம்பிகள், கேபிள் ஒயர்கள் போன்றவற்றை அமைப்பவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதமும், 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மரங்களில் அமைக்கப்பட்டுள்ள தேவையற்ற விளம்பர பலகைகள், மின்சார அலங்கார விளக்குகள், கேபிள் ஒயர்கள் உட்பட இதர பொருட்களை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தாமாகவே முன்வந்து 10 தினங்களுக்குள் அகற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்த புகார்களை 1913 என்ற இலவச எண்ணில் பொதுமக்கள் தெரிவிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments

Write A Comment