ஓமலூர் அருகே தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணின் துப்பட்டாவை பிடித்து இழுத்து பாலியல் தொல்லை கொடுத்த இரண்டு இளைஞர்களை இருவரை போலீசார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் ராமிரெட்டியப்பட்டி பகுதியைச் சேர்ந்த கோவிந்தன், மின்பாதை ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவர், தனது மகள் சரண்யாவுக்கு உடல்நலமின்மையால் இருசக்கர வாகனத்தில் அமரவைத்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். தாரமங்கலம் அருகே சென்ற போது, பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த அதே பகுதியைச் சேர்ந்த மோகன்ராஜ் மற்றும் சக்திவேல் இருவரும், தந்தையின் கண்ணெதிரே சரண்யாவின் துப்பட்டாவையும், ஜடையையும் பிடித்து இழுத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் இளைஞர்களின் அத்துமீறலை கண்ட அப்பகுதி பொதுமக்கள் இருவரையும் பிடித்து தாக்கி போலீசில் ஒப்படைத்தனர். கைது செய்த இருவர் மீதும் பெண் வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர்.
0 Comments