Tamil Sanjikai

ஐக்கிய அரபு எமிரேகத்தின் மிக உயர்ந்த குடிமகன் விருதான சயித் பதக்கத்தை அந்நாட்டு அரசு பிரதமர் மோடிக்கு வழங்கி கவுரவிக்க உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உடன் உறவுகளை பராமரிப்பதில் அவரின் முயற்சிகளை பாராட்டியுள்ளது.

அரசர்கள், ஜனாதிபதிகள் மற்றும் மாநிலங்களின் தலைவர்களுக்கு வழங்கப்பட்ட மிக உயர்ந்த இந்த விருது சயித் பதக்கம், இந்திய பிரதமருக்கு வழங்குவதை ஐக்கிய அரபு எமிரேட் ஜனாதிபதி ஷேக் கலீஃபா பின் சயத் அல் நஹியான் ஒப்புதல் வழங்கி உள்ளார்.

இரு நாடுகளுக்கும் நீண்ட கால நட்பு மற்றும் கூட்டு மூலோபாய ஒத்துழைப்பை உறுதிப்படுத்துவதில் நரேந்திர மோடியின் பங்களிப்பை பாராட்டும் வகையில் இந்த விருது வழங்கப்படுகிறது

0 Comments

Write A Comment