Tamil Sanjikai

கோவை அரசு மருத்துவமனை வளாகத்திற்கு வெளியே தூக்கியெறியப்பட்ட குழந்தை, தனியார் காப்பகத்தில் இன்று ஒப்படைக்கப்பட்டது.

கடந்த வியாழக்கிழமை அன்று இரவு கோவை அரசு மருத்துவமனையின் பின்புறத்தில், தூக்கி எறியப்பட்ட பிறந்து 7 நாட்களான ஆண் குழந்தையை கல்லூரி மாணவர்கள் இருவர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தனர்.

இந்நிலையில், அந்த குழந்தை தனியார் காப்பகத்தில் (லைப் லைன்) ஒப்படைக்கப்பட்டது. மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் அதிகாரி முன்னிலையில், அரசு மருத்துவமனை இருப்பிட மருத்துவ அதிகாரி செளந்தரவேல் குழந்தையை ஒப்படைத்தார். அந்த ஆண் குழந்தைக்கு அர்ஜூன் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

0 Comments

Write A Comment