Tamil Sanjikai

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள பாலகோட் எல்லைக்கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள பாலகோட் எல்லைக்கோட்டில் தொடர்ந்த பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி வருவது தொடர்கதையாகி வருகிறது . இந்த தாக்குதலினால் நமது நாட்டை சேர்ந்த ராணுவ வீரர்களும். எல்லையில் வசிக்கும் அப்பாவி பொதுமக்களும் உயிரிழந்து வருகின்றனர்.

இந்நிலையில் மீண்டும் போர் கோட்ப்பாடுகளை மீறிய பாகிஸ்தான் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள பாலகோட் எல்லைப் பகுதியில் இந்திய கண்காணிப்பு நிலைகளையும், அருகாமையில் உள்ள கிராமங்களையும் நோக்கி துப்பாக்கிகளால் சுட்டும், மோர்ட்டார் ரக குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலுக்கு இந்திய வீரர்களும் எதிர்தாக்குதல் நடத்தி தகுந்த பதிலடி கொடுத்துள்ளனர்.

0 Comments

Write A Comment