Tamil Sanjikai

ஆன்லைனில் மருந்து விற்பனைக்கு இடைக்காலத் தடை : உயர்நீதிமன்றம்

ஆன்லைனில் மருந்து மாத்திரைகள் விற்பனை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

ஆன்லைனில் மருந்துகள் விற்பனை செய்வதைத் தடைசெய்யக் கோரி தமிழ்நாடு மருந்து வணிகர் சங்கம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு ஓன்று தொடரப்பட்டிருந்தது, அதில் சரியான மருத்துவச்சீட்டு இல்லாமலும், காலாவதியான போலி மருந்து மாத்திரைகளை விற்பனை செய்வதாகவும், பொதுமக்கள் இதனால் மிகுந்த பாதிப்புக்குள்ளாகியிருப்பதாகவும், மேலும் மருந்து விற்பனை செய்ய வேண்டும் என்றால் மருத்துவர் பரிந்துரை செய்யவேண்டும் என விதி உள்ளது, இந்த விதிகள் எதையும் ஆன்லைன் விற்பனையாளர்கள் கடைபிடிப்பதில்லை என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று நீதிபதி மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்தது, வழக்கை விசாரித்த நீதிபதி, ஆன்லைனில் மருந்து மாத்திரைகளை விற்பதற்கு இரண்டு வாரத் தடை விதித்ததோடு மத்திய, மாநில அரசுகள் இது தொடர்பாக பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை இரண்டு வாரத்துக்கு ஒத்திவைத்தது.

0 Comments

Write A Comment