தூசி மண்டிக் கிடந்த
பரணை தூர்வாரினேன்...
எதேச்சையாக கல்லூரி புத்தகமொன்று கையில்
கிடைத்தது..
என் விரல்ரேகைகளை விட
அவளின் கைத்தடங்களே
எஞ்சியிருந்தது..
புத்தகத்தை திறந்து மூடும் வரை
அவளின் ப்ளூ லேடி சென்ட் வாசனை
பரண் முழுக்க பரவிக் கிடந்தது..
அப்பா'வென மழலை மொழி குறுக்கிட
கீழே வந்து குழந்தையை தூக்கினேன்...
அதே செண்ட்வாசனை
என் மகள் மீது..
இது எதேச்சையில்லையென நானறிவேன்...
மூன்றாம் ஆண்டின் பண்டிகையில்
தூர்வாரச் சொல்லும்
மனையாளும் அறிவாள்..
-அகிலன்
0 Comments