Tamil Sanjikai

இந்தியாவில் அனைத்து வகை பிரிவினரையும் கவரும் வகையில் ஸ்கோடா கார் நிறுவனம் பல்வேறு வகையான கார்களை அறிமுகம் செய்து இந்திய சந்தையில் முக்கிய பங்காற்றி வருகிறது.

இந்நிலையில், தென்னிந்தியாவில் வர்த்தகத்தை விரிவுபடுத்தும் விதமாக, வாடிக்கையாளர்களின் வசதிக்கேற்பவும் இந்தியாவிலேயே மிகப்பெரிய உயர்தர கார் பணிமனையை கோவை சவுரிபாளையத்தில் ஸ்கோடா கார் நிறுவனம் கோவையில் தொடங்கியுள்ளது.

மேலும், மொத்தம் 49,585 சதுர அடி பரப்பளவு கொண்ட இந்த பணிமனையில் ஒரே நேரத்தில் 50 கார்களை நிறுத்த முடியும். மேலும், ஆண்டிற்கு 20,000 கார்களை சர்வீஸ் செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மிகப்பெரிய பணிமனை துவக்க விழா எஸ்.ஜி.ஏ. கார்ஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரி அற்புதராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக ஸ்கோடா நிறுவனத்தின் சேவை மற்றும் மார்க்கெட்டிங் இயக்குனர் ஜாக்ஹோலிஸ் கலந்து பணிமனையை திறந்து வைத்தார்.

அப்போது பேசிய அவர், “ஸ்கோடா இந்தியா தனது வர்த்தகத்தை தென்னிந்தியாவில் விரிவுபடுத்தும் விதமாக இந்த பணிமனை திறக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வசதிகளின் மூலம், எங்களது பிராண்டை மேம்படுத்த முடியும். மேலும், எஸ்.ஜி.ஏ. கார்ஸ் உடன் ஸ்கோடா இந்தியாவின் ஒன்றிணந்த செயல்பாட்டில் நம்பிக்கை உள்ளது,” என்றார்.

0 Comments

Write A Comment