செக்க சிவந்த வானம் படத்தை தொடர்ந்து தன்னுடைய கனவு படமான பொன்னியின் செல்வன் என்னும் திரைப்படத்தை மூத்த இயக்குனரான மணிரத்னம் உருவாக்கி வருகிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ள இந்த படத்துக்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்ய உள்ளார்.
அதோடு ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், அமலாபால், கீர்த்தி சுரேஷ், பார்த்திபன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தெரிகிறது.
இந்த படம் குறித்த எந்த தகவலும் வெளிவராத நிலையில் வரும் டிசம்பர் முதல் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பை துவங்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
0 Comments