Tamil Sanjikai

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மத்திய முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாமல் இருக்க லுக் அவுட் நோட்டீஸ் வழங்க அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஐ.என்.எக்ஸ் முறைகேடு வழக்கில் மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகனும், சிவகங்கை மக்களவைத் தொகுதியின் எம்.பியுமான கார்த்தி சிதம்பரத்தின் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தனித்தனியே வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த நிலையில் அமலாக்கத் துறை அதிகாரிகள் ப.சிதம்பரத்திற்கு நேரில் ஆஜராகும்படி இன்று சம்மன் அனுப்பியுள்ளனர். அதே நேரத்தில் ப.சிதம்பரம் முன்ஜாமின் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். ஆனால், டெல்லி உயர் நீதிமன்றம் அவரது மனுவை அதிரடியாக தள்ளுபடி செய்தது. இதையடுத்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த சூழ்நிலையில், ப.சிதம்பரம் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல வாய்ப்பு இருப்பதால் அவருக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்க அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

0 Comments

Write A Comment