Tamil Sanjikai

சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்களை சிலரை அதிரடியாக பணியிட மாற்றம் செய்து, தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் இன்று உத்தரவிட்டுள்ளார்.

சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி, தமிழ்நாடு இசைப் பல்கலைக்கழக பதிவாளராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். வேலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த எஸ்.ஏ.ராமன் சேலம் ஆட்சியராகவும், மாநில தேர்தல் ஆணைய செயலாளராக இருந்த டி.எஸ்.ராஜசேகர் மதுரை மாவட்ட ஆட்சியராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோன்று, அரியலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த விஜயலட்சுமி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராகவும், திண்டுக்கல் ஆட்சியராக இருந்த டி.ஜி.வினய் அரியலூர் ஆட்சியராகவும், இசை பல்கலைக்கழக பதிவாளராக இருந்த சீதாலட்சுமி சென்னை ஆட்சியராகவும், சென்னை ஆட்சியராக இருந்த சண்முகசுந்தரம், வேலூர் மாவட்ட ஆட்சியராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

0 Comments

Write A Comment