Tamil Sanjikai

தமிழ்நாட்டில் 5 லட்சத்து 41 ஆயிரத்து 150 பேர் எந்த வேட்பாளர்களுக்கும் ஓட்டளிக்க விரும்பாமல் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனர்.

தமிழகத்தில் நடைபெற்ற தேர்தலில் 37 இடங்களில் வெற்றிபெற்ற தி.மு.க. கூட்டணி மொத்தம் பதிவான வாக்குகளில் 2 கோடியே 15 லட்சத்து 96 ஆயிரத்து 481 வாக்குகளை பெற்றுள்ளது. இது 51.5 சதவீதமாகும். அ.தி.மு.க. கூட்டணி 1 கோடியே 26 லட்சத்து 6 ஆயிரத்து 636 வாக்குகளை பெற்றுள்ளது. இது 29.8 சதவீதம் ஆகும்.

இதே நேரத்தில் 5 லட்சத்து 41 ஆயிரத்து 150 பேர் நோட்டா சின்னத்தில் வாக்களித்துள்ளனர். இது 1.3 சதவீதம் ஆகும். குறிப்பாக, திருப்பூர் தொகுதியில் மட்டும் 21 ஆயிரத்து 861 பேர் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனர். இதேபோல் 22 சட்டசபை தொகுதி இடைத் தேர்தலில் 47 ஆயிரத்து 191 பேர் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனர்.

0 Comments

Write A Comment