Tamil Sanjikai

கேரளாவை சேர்ந்த பெண் ஒருவர், தான் நேசிக்கும் பெண்ணிற்காக ஆணாக மாறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவின் கோழிக்கோடு பகுதியை சேர்ந்தவர் அர்சனா ராஜ். இவருக்கு, கடந்த 2017ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. கணவருடன் அடிக்கடிஏற்பட்ட சண்டையின் காரணமாக கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றார்.

இந்நிலையில், அர்ச்சனாவிற்கும் அவர் வேலைபார்க்கும் அலுவலகத்தின் மற்றொரு கிளையில் வேலைபார்க்கும் வேறு ஒரு பெண்ணுக்கும் நட்பு ஏற்பட்டது. அந்த பெண் அர்ச்சனா வேலை பார்க்கும் கிளைக்கே பணிமாற்றம் செய்யப்பட்டு வந்தபோது அவர்களது நட்பு இன்னும் அதிகமானது. இருவரும் மிக நெருக்கமாக பழகிவந்துள்ளனர்.

ஆனால், அந்த சமயத்தில் அர்ச்சனாவின் தோழிக்கு அவரது வீட்டில் திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்யத்தொடங்கியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அர்ச்சனா, அவரது தோழியிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்டிருக்கிறார் . அதற்கு, அவரது தோழி அவரை ஆணாக மாறவேண்டும் என வற்புறுத்தியுள்ளார்.

தன் காதலி ஆசைப்பட்டதால் ஆணாக மாறும் சிகிச்சை செய்த அர்ச்சனா, தன் பெயரையும் தீபு என மாற்றிக்கொண்டார். பின்னர், தன் தோழியிடம் சென்று திருமணத்திற்காக கேட்டபோது அவர் மறுத்துள்ளார். இதனால் மனமுடைந்த தீபு, அவரது தோழி மீது போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளார்.

இரு பெண்களுக்கு இடையிலான நட்பு காதலாக மாறி இதுபோன்று விசித்திரமாக நடைபெற்ற சம்பவம் பலரையும் அதிர்ச்சியடைய செய்த்துளது.

0 Comments

Write A Comment