கோயம்பேட்டில் இருந்து மெட்ரோ ரயில் பணிக்காக, இதுவரை மதுரவாயல் வழியாக சென்ற வெளியூர் பேருந்துகள் இனி அசோக் பில்லர் வழியாக இயக்கப்படும் என்று அரசு விரைவு பேருந்து போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
பொதுமக்களின் வசதிக்கேற்ப வடபழனி, அசோக்பில்லர், தாம்பரம் வழியாக வெளியூர் பேருந்துகள் செல்லும் என்றும், காலை 10 முதல் மாலை 4.30 வரையிலும், இரவு 9.30 முதல் காலை 7 மணி வரையிலும் மாநகர் சாலை வழியாக வெளியூர் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும், வடபழனி, அசோக் பில்லர், ஆலந்தூர், குரோம்பேட்டை, தாம்பரத்திலிருந்தும் அரசு பேருந்தில் பயணம் செய்ய முன்பதிவும் செய்து கொள்ளலாம் என்று அரசு விரைவு பேருந்து போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
0 Comments