Tamil Sanjikai

லண்டனில் தலைமறைவாக இருக்கும் நீரவ் மோடியைக் கைது செய்ய இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்த வைரவியாபாரி நீரவ் மோடியும், அவரது உறவினர் மெகுல் சோக்சியும் தலைமறைவாகினர். இதனைத் தொடர்ந்து அவரை தேடப்படும் குற்றவாளியாக அமலாக்கத்துறை அறிவித்தது.

இந்நிலையில் தொழிலதிபர் நீரவ் மோடி லண்டனில் இருப்பதாக சமீபத்தில் வீடியோ வெளியானது. அதில் லண்டனில் சொகுசு பங்களாவில் வசித்து வருகிறார் நீரவ்மோடி, அந்நாட்டின் செய்தி நிறுவனமான தி டெலிகிராஃப் வெளியிட்டுள்ள தகவலின்படி, ரூ. 75 கோடி அபார்ட்மென்ட்டில் நீரவ் மோடி லண்டனில் வசித்து வருகிறார். அங்கும் வைரவியாபாரம் செய்து வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அவரைக் கைது செய்யவேண்டும் என்று அமலாக்கத்துறை சார்பில் இங்கிலாந்து உள்துறைச் செயலாளர் சஜித் ஜாவித்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நீரவ்மோடியை கைது செய்து ஆஜர்படுத்துமாறு வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் கைதானதைத் தொடர்ந்து அவர் இந்தியாவுக்கு கொண்டு வரப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 Comments

Write A Comment