Tamil Sanjikai

வரும் அக்டோபர் 11 ஆம் தேதி மாமல்லபுரம் வரவிருக்கும் சீன அதிபருக்கு கருப்புக்கொடி காட்ட திட்டமிட்டதாக திபெத்திய பேராசிரியரை சென்னையில் போலீசார் கைது செய்தனர்.

சென்னை அடுத்த படூரில் உள்ள தனியார் பல்கலைக்கழக பேராசிரியர் டென்சின் நோர்பு, மாமல்லபுரம் வரும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு எதிராக திபெத்திய இளைஞர்களை ஓன்று திரட்டி கருப்புக்கொடி காட்ட திட்டமிட்டதாக புகார் கூறப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் பேராசிரியரை கைது செய்துள்ளனர்.

சில நாட்களுக்கு முன்பு திபெத்திய இளைஞர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் பேராசிரியர் டென்சின் நோர்பு கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments

Write A Comment