Tamil Sanjikai

செய்தியாளர் சந்திப்பில், செய்தியாளர் ஒருவரிடம் சாதி குறித்து கேள்வி எழுப்பிய விவகாரத்தில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை நுங்கம்பாக்கம் புதிய தமிழகம் கட்சி அலுவலத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி, செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்காமல், அவரது சாதி குறித்து கேள்வி எழுப்பியதோடு சிறிதும் மரியாதையின்றி ஒருமையில் பேசினார்.

கிருஷண்சாமி யின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், கிருஷ்ணசாமி மீது வழக்கறிஞர் தமிழ்வேந்தன் என்பவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

மருத்துவர் என்ற பொறுப்பை சற்றும் உணராமல், சாதிக் கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய கிருஷண்சாமி மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வழக்கறிஞர் தமது புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

0 Comments

Write A Comment