Tamil Sanjikai

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டம் வென்ற பி.வி.சிந்துவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற முடிந்த உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, ஜப்பானின் நசோமி ஒகுஹாராவை வீழ்த்தி தங்கம் வென்று அசத்தியுள்ளார்.

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையையும் பி.வி.சிந்து பெற்றுள்ளார்.
இந்த நிலையில், இந்தியாவை மீண்டும் பெருமை கொள்ளச் செய்திருக்கும் பி.வி. சிந்துவிற்கு வாழ்த்துகள். சிந்துவின் வெற்றி வருங்கால வீரர்களுக்கும் ஊக்கமளிப்பதாக அமையும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

0 Comments

Write A Comment