Tamil Sanjikai

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து பல்வேறு அமைப்புகள் சார்பில் பொள்ளாச்சியில் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடைய 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்த வழக்கில் மேலும் பலருக்கு தொடர்பு இருப்பதாகவும்,தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வலியுறத்தி இன்று பொள்ளாச்சியில் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால், 90 சதவீதத்துக்கும் மேலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

உணவகங்கள், மருந்துக் கடைகள் உள்ளிட்டவை அடைக்கப்பட்டுள்ளதால், அங்கு இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்துக் கட்சிகள் மற்றும் மகளிர் அமைப்புகள் சார்பில் இன்று மாலை கண்டன ஊர்வலம் நடைபெற உள்ளது. இதன் காரணமாக, பொள்ளாச்சி நகரில் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

0 Comments

Write A Comment