Tamil Sanjikai

நிதி ஆயோக்கின் ஆண்டுக் கூட்டத்தில் பங்கேற்க அனைத்து மாநில முதல்வர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நிதி ஆயோக்கின் 5 -ஆவது கூட்டம், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் டெல்லியில் வரும் ஜூன் 15 -ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்க அனைத்து மாநில முதல்வர்களுக்கும் நிதி ஆயோக் அழைப்பு விடுத்துள்ளது. மாநில ஆளுநர்கள், துணைநிலை ஆளுநர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நிதி ஆயோக் கூட்டத்தில், மாநில அரசுகளின் கருத்துகள், கொள்கை முடிவுகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளன.

0 Comments

Write A Comment