Tamil Sanjikai

தெலங்கானா மாநில சட்டமன்றத் தேர்தல் நாளை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வரதன்னாபேட்டை பகுதியில் காங்கிரஸ் தொண்டர் வீட்டில் 3 கோடி ரூபாயை போலீசார்,பறிமுதல் செய்தனர். தெலங்கானா மாநில சட்டமன்றத் தேர்தல் நாளை நடைபெற உள்ளது. தேர்தலில் பணம் நடமாட்டத்தை தடுக்க மாநிலம் முழுவதும் சிறப்பு சோதனை சாவடிகள் அமைத்து வாகன சோதனை நடத்தப்படுகிறது.

இந்த நிலையில் நேற்றுவரை முறையான ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட 109.7 கோடி ரூபாய் பணம், 10 கோடியே 87 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஐந்து லட்சத்து 13 ஆயிரத்து 216 லிட்டர் மது வகைகள், 8 கோடியே 92 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம், வெள்ளி ஆகியவை உள்ளிட்ட பல்வேறு பொருட்களை அதிகாரிகள், போலீசார் ஆகியோர் கைப்பற்றி பறிமுதல் செய்தனர். இன்று தங்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் வரதன்னாபேட்டை தொகுதிக்குட்பட்ட காஜி பேட்டையில் காங்கிரஸ் தொண்டர் அம்ருதாராவ் வீட்டில் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய தயாராக வைக்கப்பட்டிருந்த 3 கோடி ரூபாயை போலீசார் ரகசிய தகவல் மூலம் கைப்பற்றி பறிமுதல் செய்தனர்.

0 Comments

Write A Comment