Tamil Sanjikai

முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஹெலினா ஏவுகணையின் சோதனை வெற்றி பெற்றுள்ளது. 7 முதல் 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை குறிவைத்து தகர்க்கும் ஹெலினா ஏவுகணை, 335 கோடி ரூபாய் மதிப்பீட்டில். மிகவும் நவீனமானதாக கருதப்படும் இந்த ஏவுகணை, எதிரி நாட்டு டேங்குகளை மிகத்துல்லியமாக குறிவைத்து தாக்கி அழிக்கும் தன்மை வாய்ந்தது.

இந்த ஏவுகணையானது ஒடிசாவின் பாலசோர் மாவட்ட கடற்கரையில் பரிசோதிக்கப்பட்டது. ஹெலிகாப்டரில் இருந்து ஏவப்பட்ட ஹெலினா, குறிவைத்த இலக்கை துல்லியமாக தாக்கி அழித்தது. நாட்டின் பாதுகாப்பு துறையில் ஹெலினா முக்கியப் பங்கு வகிக்கும் என்று கூறப்படுகிறது.

0 Comments

Write A Comment