Tamil Sanjikai

சென்னை ஓட்டேரி பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் ஒரு ஆட்டோ டிரைவர். இவரது மனைவி பவானி, இவர்களது 19 வயது மகள் வளர்மதி. தண்டையார் பேட்டையில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று மாலை திடீரென, வளர்மதி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்து பதறி, மகளை கட்டிக் கொண்டு அழுதனர் பெற்றோர்.உடனடியாக ஓட்டேரி போலீசில் புகார் தரவும், போலீசார் விசாரணையை துவங்கினர். அப்போதுதான் வளர்மதி தற்கொலைக்கு முன்பு எழுதிய கடிதம் ஒன்றை கைப்பற்றினர். அதில், புளியந்தோப்பை சேர்ந்த மணிகண்டன் என்ற 20 வயது இளைஞரை காதலித்து வந்துள்ளார். இருவருக்கும் இடையே ஏதோ கருத்து வேறுபாடு வந்துள்ளது. அதனால் மணிகண்டன் போன் பண்ணி வளர்மதியை கேட்ட வார்த்தையால் திட்டி இருக்கிறார். இதில் மனம் உடைந்து போன வளர்மதி, கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த விவரங்கள் எல்லாம் விசாரணையில் தெரியவந்ததை அடுத்து பெற்றோர், உறவினர்கள் மேலும் அதிர்ந்தனர். இதனிடையே விஷயம் தெரிந்து கல்லூரி மாணவர்கள் விரைந்து வந்துவிட்டனர். புளியந்தோப்பு ஆடு தொட்டி அருகே அனைவரு ஒன்று கூடி, மணிகண்டன் மீது நடவடிக்கை எடுக்க கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்

பெற்றோர், உறவினர், பொதுமக்கள், மாணவர்கள் என ஒட்டுமொத்தமாக திரண்டு திடீரென மறியலில் ஈடுபட்டதால் அந்த பகுதியே பரபரப்பானது. போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, நடவடிக்கை எடுப்பதாக உறுதி தந்தனர்.

0 Comments

Write A Comment