தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 தினங்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,திருவள்ளுவர், காஞ்சிபுரம்,வேலூர் உள்பட 13 மாவட்டங்களில் அடுத்த 2 தினங்களுக்கு இயல்பை விட வெப்பம் 3டிகிரி முதல் 5டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும், இதனால் அனல் காற்று வீசும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் நேற்று தகவல் தெரிவித்து இருந்தது.
இந்நிலையில் இன்று வெப்பத்தின் தாக்கம் சற்று குறைந்துள்ள நிலையில் அனல் காற்றுக்கான எச்சரிக்கை விலக்கி கொள்ளப்பட்டது. ஆனால் இந்த 13 மாவட்டங்களில் இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் எனவும், சென்னையை பொறுத்த வரை வானம் தெளிவாக இருக்கும், அதிகபட்ச வெப்பம் 36 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பம் 27 டிகிரி செல்சியசாக இருக்கும் என வானிலை மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
0 Comments