Tamil Sanjikai

ஈரான் நாட்டைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர் நஸ்ரீன் சோட்டோடே என்பவருக்கு 148 கசையடிகளுடன் சேர்த்து 38 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து ஈரான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மனித உரிமைகளுக்கான வழக்கில் ஆஜராகி வாதாடும் நஸ் ரீன் தேசிய பாதுகாப்புக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும், நாட்டின் உயர் நிலைத் தலைவர்களை அவமதித்துப் பேசியதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பெண்கள் உரிமை மற்றும் மனித உரிமைகளுக்காக தமது வாழ்க்கையை அர்ப்பணித்த நஸ் ரீனுக்கு ஈரான் அரசு தண்டனை வழங்குவது குறித்து உலக அளவில் பல்வேறு அமைப்பினர் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்

0 Comments

Write A Comment