Tamil Sanjikai

கோவையில் தனியர் கல்லூரி மாணவர் ஒருவர் தனது சக மாணவர்கள் முன்பு கல்லூரி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை, சுந்தராபுரம் பூங்காநகர் பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவரின் மகன் விஷ்ணு (19). இவர் ஈச்சனாரி அருகில் உள்ள (கற்பகம்) தனியார் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவர் உடல் நலக் குறைபாடு காரணமாக கடந்த 15 நாட்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல் கல்லூரிக்கு வந்த விஷ்ணு முதல் வகுப்பு முடிந்து, ஆசிரியர் வெளியே சென்ற பின் திடிரென இரண்டாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதில் சம்பவ இடத்திலேயே விஷ்ணு உயிரிழந்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மதுக்கரை போலீசார் விஷ்னுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

0 Comments

Write A Comment