Tamil Sanjikai

மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் தம்மை கைது செய்து சித்ரவதை செய்த போலீஸ் அதிகாரி ஹேமந்த் கர்கரே தமது சாபத்தால் தான் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று பிராக்யா கூறிய கருத்துக்கு கடும் கண்டனம் எழுந்தது.

மத்தியபிரதேச மாநிலம் போபால் தொகுதி பா.ஜ,க வேட்பாளராக சாத்வி பிரக்யா சிங் தாகூர் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் மும்பை பயங்கரவாத தாக்குதலில் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த, அசோக சக்ரா விருது பெற்ற ஒரு போலீஸ் அதிகாரியை குறித்த கருத்துக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்ததையடுத்து, சாத்வியின் கருத்துக்கும், கட்சிக்கும் தொடர்பில்லை என்று மறுப்பு தெரிவித்து பாஜக அறிக்கை வெளியிட்டது.

இதனால் தமது கருத்தை திரும்பப் பெற்று மன்னிப்பு கோருவதாக சாத்வி பிராக்யா அறிவித்துள்ளார். "எதிரி நாட்டின் தீவிரவாதிகளின் துப்பாக்கித் தோட்டாக்களால் பலியான கார்கரே நிச்சயமாக நாட்டுக்காக உயிரைத் தந்த வீரர்தான்" என்று சாத்வி பிராக்யா தெரிவித்துள்ளார்.

0 Comments

Write A Comment