Tamil Sanjikai

"என்னுடைய வீட்டுத் தோட்டத்தில், பணத்தை பதுக்கி வைத்தவர்கள் யாரென்று எனக்கு தெரியும். பொறுத்திருந்து பாருங்கள்" என்று, ஆம்பூர் சட்டமன்ற அலுவலக திறப்பு விழாவில் திமுக பொருளாளர் துரைமுருகன் பேசினார்.

மேலும், என் வீட்டில் சோதனை செய்வதற்காக ஓய்வுபெற்ற அதிகாரிகளை நியமித்தது யார்? எனக் கேள்வி எழுப்பிய துரைமுருகன், என் மகனை லாரி ஏற்றி கொல்லச் சொன்னது யார்? என கண்ணீர் மல்க பேசினார்.

0 Comments

Write A Comment