Tamil Sanjikai

ஆவின் பால் கடந்த ஆண்டு முதல் சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் நிலையில், தற்போது கத்தார் நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக ஆவின் அறிவித்து உள்ளது. தமிழகத்தில் அதிகமாக விற்பனையாகும் ஆவின் பாலுக்கு வெளிநாடுகளிலும் கிராக்கி ஏற்பட்டு வருகிறது.

ஏற்கனவே சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் நாடுகளுக்கு டெட்ரா பேக்கிங் செய்யப்பட்ட ஆவின்பால் கன்டெய்னர்களில் அனுப்பி வைக்கப்பட்டு, விற்பனைசெய்யப்படும் நிலையில், தற்போது கத்தார் நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது. வரும் 1ந்தேதி முதல் அங்கு விற்பனைக்கு வருகிறது. கத்தார் நாட்டின் தலைநகர் தோகாவில் ஆவின் விற்பனையை பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்.

0 Comments

Write A Comment