Tamil Sanjikai

ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையை மீறி சிரியாவுக்கு எண்ணெய் கொண்டு சென்றதாக ஈரானின் சூப்பர்டேங்கர் கிரேஸ் கிப்ரால்டர் எண்ணெய் கப்பலை கடற்பகுதியில் வைத்து சிறைபிடிக்கப்பட்டதாக இங்கிலாந்து தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், இத்தகவலை ஈரான் மறுத்துள்ளது. சிரியாவிற்கு எண்ணெய் கொண்டு செல்லப்படவில்லை கப்பல் சர்வதேச கடல்பகுதியில் சிறைபிடிக்கப்பட்டுள்ளது என ஈரான் கூறுகிறது. கப்பலை விடுவிக்குமாறு ஈரான் கேட்டு வருகிறது.

இந்நிலையில் கப்பல் சிறைபிடிக்கப்பட்ட விவகாரத்தில் சரியான பதிலடியை கொடுக்காமல் விடப்போவது கிடையாது என ஈரான் பாதுகாப்பு அமைச்சர் அமீர் ஹதாமி எச்சரிக்கை விடுத்துள்ளார் என ஈரானில் உள்ள உள்ளூர் மீடியாவில் செய்திகள் வெளியாகியுள்ளன.

“இங்கிலாந்து நடவடிக்கை சர்வதேச விதிமுறைகளை மீறும் செயலாகும், ஒருவகையான கொள்ளையாகும்” என ஈரான் கூறியுள்ளது.

ஈரான் மீது அமெரிக்கா தொடர்ச்சியாக பொருளாதார தடைகளை விதித்துவரும் நிலையில் இங்கிலாந்தின் சிறைபிடிப்பு நடவடிக்கை ஈரானுக்கு மற்றொரு நெருக்கடியாக அமைந்துள்ளது.

0 Comments

Write A Comment