Tamil Sanjikai

இந்திய வம்சாவளி பெண் பிரீத்தி ரெட்டி (32) ஆஸ்திரேலியாவில் பல் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று சிட்னியில் நடைபெற்ற மருத்துவ மாநாட்டில் பங்கேற்றுள்ளார். அன்றைய தினம் இரவு அவர் வீடு திரும்பாத காரணத்தால் சந்தேகமடைந்த அவருடைய தங்கை நித்யா போலீசில் புகார் அளித்துள்ளார்.

அதன் அடிப்படையில் ப்ரீத்தியின் முன்னாள் காதலனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, மாநாடு முடிந்த பின்னர் ப்ரீத்தி முன்னாள் காதலனுடன் ஓட்டலில் அறை எடுத்து தங்கியிருந்தது தெரிய வந்தது. அதோடு அல்லாமல் அவருடைய முன்னாள் காதலனும் ஒரு பல் மருத்துவர் என்பதும், அவரும் மாநாட்டில் கலந்து கொண்டார் என்பதும் தெரிய வந்தது.

இந்த விசாரணை முடிந்த சில மணி நேரங்களிலேயே, சிட்னியில் இருந்து 4 மணி நேர பயணமாக இங்கிலாந்து நெடுஞ்சாலையில் காரில் சென்று கொண்டிருந்த அந்த இளைஞர், எதிரில் வந்த காரில் மோதி விபத்தில் சிக்கி இறந்துள்ளார்.

இதனால் போலீசாருக்கு சந்தேகம் வலுக்க ஆரம்பித்தது. உடனே அவர் தங்கியிருந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது காதலனுடன் அறைக்கு செல்வதற்கு முன்பு ப்ரீத்தி அங்கிருந்த ஒரு கடைக்கு சென்று வந்தது பதிவாகியிருந்தது.

ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு பிறகு இதுவரை ப்ரீத்தியின் செல்போன் எண்ணை தொடர்பு கொள்ள முடியவில்லை என அவருடைய குடும்பத்தினர் தெரிவிக்தனர். இதனையடுத்து தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்திய போலீசார் ப்ரீத்தியின் கார் கிங்ஸ்போர்ட் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதை கேள்விப்பட்டு வேகமாக விரைந்தனர்.

அங்கு காரின் பின்பகுதியை திறந்த பொழுது ஒரு சூட்கேஸ் இருந்துள்ளது. அதனுள் இருந்த ப்ரீத்தியின் உடலில் பல முறை கத்தியால் குத்தப்பட்டதற்கான தடயங்கள் இருந்தது. இந்த நிலையில் அவருடைய உடலை கைப்பற்றியுள்ள போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

0 Comments

Write A Comment