Tamil Sanjikai

தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் உள்பட 6 பேரிடம், 1 கோடியே 10 லட்சம் ரூபாய் கேட்டு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார்.

கோடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு உள்ளது என தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் குற்றம்சாட்டி உள்ளார். மேலும் இது தொடர்பாக கோடநாடு வழக்கில் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளிவந்த சயன் மற்றும் மனோஜ் ஆகியோரின் வாக்குமூலம் அடங்கிய ஆவணப்படத்தையும் அவர் வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில் கோடநாடு விவகாரத்தில் தமது பெயருக்கும், பதவிக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் மேத்யு சாமுவேல், சயன், வாலையாறு மனோஜ் உள்ளிட்ட 6 பேர் செயல்படுவதாக குற்றம் சாட்டி முதலமைச்சர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு ஓன்று தொடரப்பட்டுள்ளது. அதில், 1 கோடியே 10 லட்சம் ரூபாய் மான நஷ்ட ஈடாக வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

மேலும் தம்மை பற்றி பொய் பிரச்சாரங்களை பரப்ப மேத்யூ சாமுவேல் உள்ளிட்ட 6 பேருக்கும் தடை விதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்து கொள்ளுமாறு நீதிபதி கே.கல்யாண சுந்தரத்திடம் முறையிடப்பட்டது. இதையடுத்து வழக்கை நாளை விசாரணைக்கு எடுத்து கொள்ள நீதிபதி ஒப்புதல் அளித்தார்.

0 Comments

Write A Comment