Tamil Sanjikai

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை வரும் வியாழக்கிழமை விசாரணைக்கு ஆஜராக ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்போலோ மருத்துவர்கள், ஜெயலலிதாவின் வீட்டில் பணியாற்றியவர்கள், ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது அவருக்குப் பாதுகாப்பு அதிகாரியாகவும், தனிச்செயலராகவும் இருந்தவர்கள் ஏற்கெனவே ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.

இந்நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர் வரும் வியாழக்கிழமை காலை பத்தரை மணிக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. இதேபோல் மக்களவைத் துணைத் தலைவர் தம்பிதுரையும் வரும் வெள்ளிக்கிழமை காலை ஒன்பதரை மணிக்கு விசாரணைக்கு ஆஜராககுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

0 Comments

Write A Comment