Tamil Sanjikai

பிரதமர் மோடியின் கடந்த ஆட்சியில், வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தவர் சுஷ்மா ஸ்வராஜ், இம்முறை அவர் தேர்தலில் போட்டியிடவில்லை. உடல்நிலை காரணமாக அமைச்சரவையிலும் இடம்பெறவில்லை. இந்நிலையில் ஆந்திர மாநில ஆளுநராக சுஷ்மா சுவராஜ் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆந்திரா, தெலங்கானா ஆகிய இரு மாநிலங்களுக்கும் இ.எஸ்.எல். நரசிம்மன் ஆளுநராக பொறுப்பு வகித்து வந்த நிலையில், ஆந்திர மாநில ஆளுநராக சுஷ்மா ஸ்வராஜ் தற்போது நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

0 Comments

Write A Comment